செவ்வாய், 12 ஜூலை, 2011

நட்பிற்கு நன்றி !!

கண்ணாம்பூச்சி ஆடின மகிழ்ச்சியும் கவலையும் ,
மகிழ்ச்சி ஓடி ஒழிந்தது........கவலை என்னை வந்து அடைந்தது,
பயம் என்னை விடாமல் துரத்தியது ,
தரையில் விழுந்தேன் ,சிரிப்பதை மறந்தேன்,அழுவதை தொடர்ந்தேன்,
ஒரு கரம் நீண்டது ;
என் கண்ணீர் தரையில் விழுவதற்குள் தாங்கி பிடித்தது ...........
நட்பிற்கு நன்றி...........

என்றென்றும்  தாங்குவேன் உன்னை என் தோளில்......என் உயிரோடு சுவாசம் ஒட்டி இருக்கும் வரை...

பேனா கேட்டது !!!

என் பேனா என்னைப் பார்த்து கேட்டது
கவிதையாய் எழுதி தள்ளுகிறாயே உனக்கென்ன காதல் தோல்வியா என்று.........

நமது நட்பு !!!!!!!!

சொந்தம் பல வந்தாலும் பந்தம் பல சேர்ந்தாலும் நமது நட்பு எனும் பூங்காவில் பூ பூத்துக் கொண்டேதான் இருக்கும்.....
என் உடலோடு உயிர் ஒட்டி இருக்கும் வரையில்....

நெஞ்சம் சாகும் அம்மா ♥

லஞ்சம் கொடுக்காமல் பஞ்சம் பாராமல் என்னுள் நிரந்தரமாய் தஞ்சம் புகுந்து,பாச மழையால் என் விழிகளை கொஞ்சம் ஆசரவைத்து,
மெல்ல சிரிக்கும் என் அழகு தேவதையே,
கையூட்டு இல்லாமல் இவ்வுலகில் நான் பெற்ற ஒரே அதிசயம் நீ தான்
அம்மா........
உன் நெஞ்சம் நோகுமானால் என் நெஞ்சம் சாகும் அம்மா ♥

நிதி vs விதி.......

நண்பன் காதலன் ஆவது இயற்கையின் நிதி,
காதலன் நண்பன் ஆவது வாழ்க்கையின் விதி.......

கனவிலாவது காண !!!!!!!!!

கண்கள் மூடி காத்துக் கிடந்தேன்
நிஜத்தில் காண முடியாத உன் பிம்பத்தை
கனவிலாவது காண..........

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

நீ பிறந்த வருடம் உன்னைக் கடந்து சென்றாலும்,
உன் வருகையை ஏந்திய மாதமும் திகதியும் உன்னை ஒருபோதும் மறந்தது கிடையாது ,
வருடத்திற்கு ஒரு முறை காலேண்டர் எனும் பூங்காவில் பூத்துக் கொண்டுதான் இருக்கிறது உனது பிறந்தநாள்.......
மகிழ்ச்சியுடன் நீ கொண்டாடுவதற்கு அல்ல ,
உன்னை ஜனித்த தாயை கை எடுத்து கும்பிடுவதற்கு...........
பிறந்த நாள் வாழ்த்துக்கள்......