கண்ணாம்பூச்சி ஆடின மகிழ்ச்சியும் கவலையும் ,
மகிழ்ச்சி ஓடி ஒழிந்தது........கவலை என்னை வந்து அடைந்தது,
பயம் என்னை விடாமல் துரத்தியது ,
தரையில் விழுந்தேன் ,சிரிப்பதை மறந்தேன்,அழுவதை தொடர்ந்தேன்,
ஒரு கரம் நீண்டது ;
என் கண்ணீர் தரையில் விழுவதற்குள் தாங்கி பிடித்தது ...........
நட்பிற்கு நன்றி...........
என்றென்றும் தாங்குவேன் உன்னை என் தோளில்......என் உயிரோடு சுவாசம் ஒட்டி இருக்கும் வரை...
♥ ♥ ♥ ♥ ♥ ♥ என்னை படைத்த எல்லாம் வல்ல இறைவன் , மண்ணில் என்னை சுவாசிக்க செய்த என் அன்பு அம்மா ,இடறி நான் விழுந்தால் பதறிப்போய் கை கொடுக்கும் என் நண்பர்கள், என்னையும் கவிஞனாக்கிய எனது தனிமை ,இயற்கையின் வனப்பு ,இவை அனைத்தின் கலவையை இவ்வுடலில் இறுதி மூச்சு இருக்கும்வரை எனது பேனா பிரசவிக்கும் ...... பிறந்தேன் தமிழனாக...வளர்வேன் தமிழனாக... இறப்பேன் தமிழனாகவே!!! ♥ ♥ ♥ ♥ ♥ ♥
செவ்வாய், 12 ஜூலை, 2011
பேனா கேட்டது !!!
என் பேனா என்னைப் பார்த்து கேட்டது
கவிதையாய் எழுதி தள்ளுகிறாயே உனக்கென்ன காதல் தோல்வியா என்று.........
கவிதையாய் எழுதி தள்ளுகிறாயே உனக்கென்ன காதல் தோல்வியா என்று.........
நமது நட்பு !!!!!!!!
சொந்தம் பல வந்தாலும் பந்தம் பல சேர்ந்தாலும் நமது நட்பு எனும் பூங்காவில் பூ பூத்துக் கொண்டேதான் இருக்கும்.....
என் உடலோடு உயிர் ஒட்டி இருக்கும் வரையில்....
என் உடலோடு உயிர் ஒட்டி இருக்கும் வரையில்....
நெஞ்சம் சாகும் அம்மா ♥
லஞ்சம் கொடுக்காமல் பஞ்சம் பாராமல் என்னுள் நிரந்தரமாய் தஞ்சம் புகுந்து,பாச மழையால் என் விழிகளை கொஞ்சம் ஆசரவைத்து,
மெல்ல சிரிக்கும் என் அழகு தேவதையே,
கையூட்டு இல்லாமல் இவ்வுலகில் நான் பெற்ற ஒரே அதிசயம் நீ தான்
அம்மா........
உன் நெஞ்சம் நோகுமானால் என் நெஞ்சம் சாகும் அம்மா ♥
மெல்ல சிரிக்கும் என் அழகு தேவதையே,
கையூட்டு இல்லாமல் இவ்வுலகில் நான் பெற்ற ஒரே அதிசயம் நீ தான்
அம்மா........
உன் நெஞ்சம் நோகுமானால் என் நெஞ்சம் சாகும் அம்மா ♥
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
நீ பிறந்த வருடம் உன்னைக் கடந்து சென்றாலும்,
உன் வருகையை ஏந்திய மாதமும் திகதியும் உன்னை ஒருபோதும் மறந்தது கிடையாது ,
வருடத்திற்கு ஒரு முறை காலேண்டர் எனும் பூங்காவில் பூத்துக் கொண்டுதான் இருக்கிறது உனது பிறந்தநாள்.......
மகிழ்ச்சியுடன் நீ கொண்டாடுவதற்கு அல்ல ,
உன்னை ஜனித்த தாயை கை எடுத்து கும்பிடுவதற்கு...........
பிறந்த நாள் வாழ்த்துக்கள்......
உன் வருகையை ஏந்திய மாதமும் திகதியும் உன்னை ஒருபோதும் மறந்தது கிடையாது ,
வருடத்திற்கு ஒரு முறை காலேண்டர் எனும் பூங்காவில் பூத்துக் கொண்டுதான் இருக்கிறது உனது பிறந்தநாள்.......
மகிழ்ச்சியுடன் நீ கொண்டாடுவதற்கு அல்ல ,
உன்னை ஜனித்த தாயை கை எடுத்து கும்பிடுவதற்கு...........
பிறந்த நாள் வாழ்த்துக்கள்......
ஒரு சிசுவின் அழுகுரல்!!!!!!!!!!!!
அம்மா,
10 மாதம் நானிருக்க உன் கர்ப்பபையையே இனாமாக கொடுத்தவள் நீ,
பிறந்த பிறகு நானிருக்க சிறிதளவு இடம் கூடவா இல்லை நம் வீட்டில்,
ஈவு இரக்கமின்றி குப்பை தொட்டிக்கு என்னை தத்துக்கொடுத்தாய்,
என் குற்றம் யாது அம்மா ??????
நான் சுமக்கும் போது வயிற்றில் உதைத்தவன் என்னை சுமக்கும் காலம் வந்ததும் நெஞ்சில் உதைப்பான் என்று எண்ணிவிட்டாயோ????
அம்மா.........
என் பசி தீர்க்க அருகினில் நீயில்லை அம்மா,
ஒருநொடி நானும் தாயகினேன் எறும்புகளுக்கு என் சதையை இரையாக கொடுத்ததினால்,
நான்கு கால் மிருகம் ஒன்று தன் குட்டிகளுக்கு பால் கொடுப்பதைக் கண்டேன்..........
என் பசியை ஆற்ற யார் மடியை நான் நாடுவேன் அம்மா....... ஒருவகையில் நானும் வாய் இல்லாத ஜீவன் தானே............
உடம்பெல்லாம் வலிக்குது அம்மா !!!!!!!
வெறி நாய்களுக்கு இனிமேலயும் என்னால் விளையாட்டு பொம்மையாக முடியாது........
மனித பிறவி எனக்கு கிடைத்த சாபம் போலும்......
இன்னொரு பிறவிக்கொண்டு பிறப்பேன் நான்கு கால் மிருகமாக..............
செல்கிறேன் அம்மா !!!!!!!!!
கண்கள் <> <>
உன் ஒவ்வொரு வெற்றிக்கும் என் கண்கள் கைத் தட்டின,
உன் ஒவ்வொரு தோல்விக்கும் என் கண்கள் நீர் சிந்தின ,
உன் வருகைக்காக வழிமேல் விழுந்துக் காத்துக் கிடந்தன,
என்னைவிட என் கண்கள் தான் உன்னை அதிகம் நேசிகின்றன ,
உன்னை முதன்முதலில் சந்தித்தது அவைகள் தானே........
மாயை !!!!!
பசி மறந்து தியானத்தில் கிடக்கும் துறவியாய் ஆவாய்,
வாரிய கூந்தலைக் கலைத்து மீண்டும் மீண்டும் கோதுவாய்,
ஆடையில் உள்பகுதி எது வெளிபகுதி எது என்று போராட்டம் நடத்துவாய் ,
வீட்டு கண்ணாடி முகம் சுளிக்கும் அளவிற்கு நிமிடத்திற்கு ஒரு முறை உன் தோற்றத்தைக் காணுவாய் ,
கிணற்றில் தண்ணீரை எடுத்து குடத்தை நிரப்பாமல் தரையை ஈரமாக்குவாய் ,
செவிகிழியும் விறு விருப்பான பாடல்களில் இருந்து மனம் குளிரும் மெல்லிசைக்கு மாறுவாய் ,
சுவற்றில் உள்ள சுண்ணாம்பை விரல் நுனியால் பிய்த்து எடுப்பாய் ,
கை விரல் இவ்வாறு இருக்க கால் விரல் மட்டும் என்ன விதிவிளக்கா,
வாசல் தெளித்து புள்ளி வைக்காமலே கோலம் போடும்........கேட்டால் நாணம் என்பாய்,
உனது நிழலோடு ஒரு நிழல் சேர்ந்து இரட்டையாக விழுவதாய் உணர்வாய் ,
ஒவ்வொரு பற்களிலும் சிரிப்பாய்,
தனிமையில் இனிமையாய் காணுவாய் ,
இனிமையிலும் உனது கற்பனையை சொர்பனமாய் உணர்வாய் ,
நண்பர்கள் எதிரிகளாக தெரிவர்.....விலகி ஓடுவாய் ,
கையில் ஒரு ரோஜாவை ஏந்தி நித்தம் நடிகனைப் போல் ஒத்திகை பார்ப்பாய்,
மனதில் கவியலை பெருக்கெடுத்து ஓடும்......இதயக்கரையை வந்து வந்து மோதும்,
எதற்கும் துணிந்தவனான உனக்குள் இனம்புரிய நடுக்கம் அறிவாய்,
வானிலை மாற்றம் கூட உனக்கு எதிர்மறையே-
குளிர் காலத்தில் வியர்த்து , வெயில் காலத்தில் நடுங்கும் அதிசய பிறவி ஆவாய் ,
காகிதப் பூவிலும் வாசத்தை உணரும் உனது மூக்கு,
வானத்தில் ஜோடி விண்மீன்களை இடைவிடாது தேடும் உனது கண்கள் ,
காயத்ரி நாமத்தைப் போன்று ஏதோ ஒன்றை தொடர்ந்து உச்சரிக்கும் உனது உதடுகள்,
மொத்தத்தில் நீ ஒரு கவிஞன் ஆவாய்.
கொடிய நோய் என்று அஞ்சிவிட வேண்டாம் ,
புதன், 6 ஜூலை, 2011
வெற்றி நிச்சயம்
உள்ளங்கையை மடக்கு
அதற்குள் உனது முயற்சி எனும் முலாதரனை பதுக்கு,
எண்ணங்களை மனதின் ஓரம் கிறுக்கு ,
மதிக்கு வேலை கொடு ........உணர்சிகளுக்கு பூட்டு போடு,
தோல்விகளுக்கு வணக்கம் கூறு.......அவை உனது ஆசிரியர்கள்,
வெற்றிகளுக்கு நன்றி கூறு அவை உந்தன் தூண்டுகோல்கள்
வெறித்தனமாய் உன் லட்சியத்தை விடாது துரத்து,
ஒளிமயமான எதிர்காலம் உனது காலடியில் சரணடையும்!!!!
பேனா கேட்டது
என் பேனா என்னைப் பார்த்து கேட்டது
கவிதையாய் எழுதி தள்ளுகிறாயே உனக்கென்ன காதல் தோல்வியா என்று.........
கவிதையாய் எழுதி தள்ளுகிறாயே உனக்கென்ன காதல் தோல்வியா என்று.........
செவ்வாய், 5 ஜூலை, 2011
வெள்ளி, 1 ஜூலை, 2011
கவிதை அரும்புகள்: வெற்றி தோல்வி
கவிதை அரும்புகள்: வெற்றி தோல்வி: "வெற்றி என்பது பெற்றுக் கொள்வது , தோல்வி என்பது கற்றுக் கொள்வது , முதலில் கற்றுக் கொள்வோம் , பிறகு பெற்றுக் கொள்வோம் !!"
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)