செவ்வாய், 12 ஜூலை, 2011

மாயை !!!!!

விளிமூடியும் உறக்கமின்றி நிதானத்தில் இருப்பாய்,
பசி மறந்து தியானத்தில் கிடக்கும் துறவியாய் ஆவாய்,
வாரிய கூந்தலைக் கலைத்து மீண்டும் மீண்டும் கோதுவாய்,
ஆடையில் உள்பகுதி எது வெளிபகுதி எது என்று போராட்டம் நடத்துவாய் ,
வீட்டு கண்ணாடி முகம் சுளிக்கும் அளவிற்கு நிமிடத்திற்கு ஒரு முறை உன் தோற்றத்தைக் காணுவாய் ,
கிணற்றில் தண்ணீரை எடுத்து குடத்தை நிரப்பாமல் தரையை ஈரமாக்குவாய் ,
செவிகிழியும் விறு விருப்பான பாடல்களில் இருந்து மனம் குளிரும் மெல்லிசைக்கு மாறுவாய் ,
சுவற்றில் உள்ள சுண்ணாம்பை விரல் நுனியால் பிய்த்து எடுப்பாய் ,
கை விரல் இவ்வாறு இருக்க கால் விரல் மட்டும் என்ன விதிவிளக்கா,
வாசல் தெளித்து புள்ளி வைக்காமலே கோலம் போடும்........கேட்டால் நாணம் என்பாய்,
உனது நிழலோடு ஒரு நிழல் சேர்ந்து இரட்டையாக விழுவதாய் உணர்வாய் ,
ஒவ்வொரு பற்களிலும் சிரிப்பாய்,
தனிமையில் இனிமையாய் காணுவாய் ,
இனிமையிலும் உனது கற்பனையை சொர்பனமாய் உணர்வாய் ,
நண்பர்கள் எதிரிகளாக தெரிவர்.....விலகி ஓடுவாய்  ,
கையில் ஒரு ரோஜாவை ஏந்தி நித்தம் நடிகனைப் போல் ஒத்திகை பார்ப்பாய்,
மனதில் கவியலை பெருக்கெடுத்து ஓடும்......இதயக்கரையை வந்து வந்து மோதும்,
எதற்கும் துணிந்தவனான உனக்குள் இனம்புரிய நடுக்கம் அறிவாய்,
வானிலை மாற்றம் கூட உனக்கு எதிர்மறையே-
குளிர் காலத்தில் வியர்த்து , வெயில் காலத்தில் நடுங்கும் அதிசய பிறவி ஆவாய் ,
காகிதப் பூவிலும் வாசத்தை உணரும் உனது மூக்கு,
வானத்தில் ஜோடி விண்மீன்களை இடைவிடாது தேடும் உனது கண்கள் ,
காயத்ரி நாமத்தைப் போன்று ஏதோ ஒன்றை தொடர்ந்து உச்சரிக்கும் உனது உதடுகள்,
மொத்தத்தில் நீ ஒரு கவிஞன் ஆவாய்.
கொடிய நோய் என்று அஞ்சிவிட வேண்டாம் ,
காதல் என்ற மாயை உனக்குள் புகுந்து விட்டதன் அறிகுறிகள் தான் இவை!!!!!!!!!!!!!!

2 கருத்துகள்:

  1. காதல் ஒரு மனிதனை ஞானியாகவும் ஆக்கும், கிறுக்கனாகவும் ஆக்கும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பா.....காதல் ஒரு புரியாத புதிர்

    பதிலளிநீக்கு